Tuesday, July 13, 2010

நிலையாமை

நீரின் மேல் விழும் வானம்
ஓன்றின்பால் நிலையாமையின் நீளம் அறிவாயெனில்.,

விழும் ஒரு துளியும்.,
வாழ்வும்.,
பட்டென சிதறிவிழும் ஈசலின் இறகும்
நிலையாமையே அன்றின் நிலையென ஏதுமிலா!!!

குரங்கின் முதுகு நிமிர பாட்டனென்றாய்..
பெண்ணை தாசிஎன பயின்று பின் தாரமென்றாய்..
பூமியை தட்டையென மொழிந்து உருண்டையென்றாய்..
விளங்கிய மதிகொண்டு விளக்கினாய்
விளங்காதெனில் என் செய்வாய்?

வீடு ஒன்றிருக்க விலாசத்தின் முதல்வரி
உன் பாட்டன்.,
பின் உன் மகனின் பாட்டன்.,
பின் உன் பெயராய் நிலைதப்பி பாயும்பார்-
என்றந்த முதல்வரி உன்மகனாய் மாறியதோ
அன்றறிவாய் நிலையாமை விளங்காததென்று!
அன்றின் அதுவன்றோ நிலை!

No comments:

Post a Comment