அன்றிரவு காதலை குடித்துமுடிக்க
சிறிது நேரமாகி இருந்தது.
முதுகுசொறிதலில் குவிந்திருந்த என்
முழுகவனத்தை திசைமாற்றி உன்
இதழ்இடுக்குகளில் என்னை சேர்வித்திருந்தது காதல்!
காதல் ஈரமாக இருப்பதில் ஆச்சரியமில்லை..
குடுவைகளின் வர்ணம் மாறியபோதும்
காதலின் வாசம் பற்றி நான் சிந்தித்திருக்கவில்லை!
வீரியம் குடுவைக்கு குடுவை வேறுபட்டிருப்பதையும் கவனிக்கவில்லை!
காதலிக்கையில் வீரியம்,வர்ணம் விளங்காதவையே!
பெரும்பாலும் பின்னிரவுகளில் வந்தமர்கிறாய் நீ..
நான் அழகாய் உணரும் அத்தருணங்களை
சேமித்துவைப்பதாய் உறுதியளிக்கும் நிலைகண்ணாடியை
மட்டும் எனக்கு பரிசளி!
முத்தங்களை இரவுக்கு இரண்டென தீர்மானித்திருக்க,
உபையோகிக்காததை கொண்டு செல்லாதே-
பச்சை வர்ணக்குடுவைக்குள் பத்திரபடுத்தித்தா.,
நாளையிரவு காதலின் வீரியமிகுதி விளங்கப்பட்டிருக்கும்!
நீ சிரிப்பதையும் சிலஇரவுகளாய் மாற்றிவிட்டிருக்கிறாய்..
அழுந்த சிரிக்கும் தருணங்களில்
உன் உதட்டு சுருக்கங்களாய் விரிந்துதொலைகிறது
என் மூளை சுருக்கங்கள்!
நான் காதலை மறுதலிக்கும் இரவுகளில்
நீ வருவதில்லை போலும்.
பிறிதொரு இரவில் இரண்டாம் குடுவையின் வாய்திறக்கையில்
பட்டென தலையில் அடித்து பாடம் நடத்துகிறாய்!!!
இரவுகளில் மட்டும் காதலிப்பதாய் உத்தேசித்திருந்தேன்! பகல்பொழுதில் உன் புறக்கணித்தலை குளிர்விக்க,
வண்ணக்குடுவைகளில் காதலை சேமிக்கிறேன் சிலதினங்களாய்..
பகலிலும் நீ வருவாயா?
காதலிக்கலாம்!
Tuesday, July 13, 2010
நிலையாமை
நீரின் மேல் விழும் வானம்
ஓன்றின்பால் நிலையாமையின் நீளம் அறிவாயெனில்.,
விழும் ஒரு துளியும்.,
வாழ்வும்.,
பட்டென சிதறிவிழும் ஈசலின் இறகும்
நிலையாமையே அன்றின் நிலையென ஏதுமிலா!!!
குரங்கின் முதுகு நிமிர பாட்டனென்றாய்..
பெண்ணை தாசிஎன பயின்று பின் தாரமென்றாய்..
பூமியை தட்டையென மொழிந்து உருண்டையென்றாய்..
விளங்கிய மதிகொண்டு விளக்கினாய்
விளங்காதெனில் என் செய்வாய்?
வீடு ஒன்றிருக்க விலாசத்தின் முதல்வரி
உன் பாட்டன்.,
பின் உன் மகனின் பாட்டன்.,
பின் உன் பெயராய் நிலைதப்பி பாயும்பார்-
என்றந்த முதல்வரி உன்மகனாய் மாறியதோ
அன்றறிவாய் நிலையாமை விளங்காததென்று!
அன்றின் அதுவன்றோ நிலை!
ஓன்றின்பால் நிலையாமையின் நீளம் அறிவாயெனில்.,
விழும் ஒரு துளியும்.,
வாழ்வும்.,
பட்டென சிதறிவிழும் ஈசலின் இறகும்
நிலையாமையே அன்றின் நிலையென ஏதுமிலா!!!
குரங்கின் முதுகு நிமிர பாட்டனென்றாய்..
பெண்ணை தாசிஎன பயின்று பின் தாரமென்றாய்..
பூமியை தட்டையென மொழிந்து உருண்டையென்றாய்..
விளங்கிய மதிகொண்டு விளக்கினாய்
விளங்காதெனில் என் செய்வாய்?
வீடு ஒன்றிருக்க விலாசத்தின் முதல்வரி
உன் பாட்டன்.,
பின் உன் மகனின் பாட்டன்.,
பின் உன் பெயராய் நிலைதப்பி பாயும்பார்-
என்றந்த முதல்வரி உன்மகனாய் மாறியதோ
அன்றறிவாய் நிலையாமை விளங்காததென்று!
அன்றின் அதுவன்றோ நிலை!
Monday, December 28, 2009
குரங்காகி, காமமாகி, பின் காதலாகி!!
பரிணாமத்தின் பொத்தான்கள்
அவிழ்ந்த வேகத்தில் -
வால் விழுந்ததுவும்,
கூன் நிமிர்ந்ததுவும்,
மேனி மயிர் உதிர்ந்ததுவும் நினைவிழந்து -
மரமேற்றதின் உச்சியில்,
தன் குறி மறைக்க உந்தியதும் கை எடுக்க.,
விழுந்த குரங்கின் கீழ்புறமிருந்து
சில மனிதனும் , நிறைய காதலும் வடிந்திருக்கும்.!!
ஆதி மனிதனின் முதல் புணர்தலில் ,
வெட்கம் விரிந்த மேனிக்கு கீழிருக்க,
கனத்து வீங்கிய காமத்தின் உரசலில்
வெள்ளையாய் காதல் வெளிபட்டிருக்கும்.!!
கூச்சத்தையும் ,சிணுங்கலையும்
முத்தத்தையும், முனகலையும்
மொழியாக்கிய அவசரத்தில்
காமதிருப்பத்தை காதலிப்பதாய்
கிறுக்கிய சுவடுகள்,
மொஹெஞ்சதாரோ குடுவையிலோ,
ஆப்பிரிக்கா மர பொந்திலோ,
அஜந்தா குகை சுவரிலோ,
பத்திரமாய் இருந்திருக்கும்!!
காலத்தின் அக்குள்களில்
மறைந்த முடியாகிய -அச்சிறு
மொழிவிளக்கம் யாதெனில்...
"யோனி சிவத்தலும் ,
குறி விரைத்தலுமே காதல்!!"
அவிழ்ந்த வேகத்தில் -
வால் விழுந்ததுவும்,
கூன் நிமிர்ந்ததுவும்,
மேனி மயிர் உதிர்ந்ததுவும் நினைவிழந்து -
மரமேற்றதின் உச்சியில்,
தன் குறி மறைக்க உந்தியதும் கை எடுக்க.,
விழுந்த குரங்கின் கீழ்புறமிருந்து
சில மனிதனும் , நிறைய காதலும் வடிந்திருக்கும்.!!
ஆதி மனிதனின் முதல் புணர்தலில் ,
வெட்கம் விரிந்த மேனிக்கு கீழிருக்க,
கனத்து வீங்கிய காமத்தின் உரசலில்
வெள்ளையாய் காதல் வெளிபட்டிருக்கும்.!!
கூச்சத்தையும் ,சிணுங்கலையும்
முத்தத்தையும், முனகலையும்
மொழியாக்கிய அவசரத்தில்
காமதிருப்பத்தை காதலிப்பதாய்
கிறுக்கிய சுவடுகள்,
மொஹெஞ்சதாரோ குடுவையிலோ,
ஆப்பிரிக்கா மர பொந்திலோ,
அஜந்தா குகை சுவரிலோ,
பத்திரமாய் இருந்திருக்கும்!!
காலத்தின் அக்குள்களில்
மறைந்த முடியாகிய -அச்சிறு
மொழிவிளக்கம் யாதெனில்...
"யோனி சிவத்தலும் ,
குறி விரைத்தலுமே காதல்!!"
Wednesday, November 11, 2009
உபயோகிப்பதில்லை உன் நினைவுகளை.!!
தேநீர் அருந்துகையில்,
இரண்டு பருகைக்கு
இடையில் சிக்கிக்கொள்ளும்
சர்க்கரை நிமிடங்களில்..
மதிய இடைவேளையில்,
உணவு மறுதலித்து,
தட்டில் சுற்றும்
மேல் மின்விசிறியின் பிம்பத்தோடு
சுற்றிய தருணங்களில்..
தூக்கம் தொலைந்து,
கெட்டித்து போயிருக்கும்
பின் இரவுகளில்...
வீங்கி கனத்திருக்கும்
விடிகாலை மௌனங்களில்..
உபயோகிப்பதில்லை
உன் நினைவுகளை.
இருக்கட்டும் என
பத்திரப்படுத்திவிட்டேன்
என் கவிதைகளில்....
இரண்டு பருகைக்கு
இடையில் சிக்கிக்கொள்ளும்
சர்க்கரை நிமிடங்களில்..
மதிய இடைவேளையில்,
உணவு மறுதலித்து,
தட்டில் சுற்றும்
மேல் மின்விசிறியின் பிம்பத்தோடு
சுற்றிய தருணங்களில்..
தூக்கம் தொலைந்து,
கெட்டித்து போயிருக்கும்
பின் இரவுகளில்...
வீங்கி கனத்திருக்கும்
விடிகாலை மௌனங்களில்..
உபயோகிப்பதில்லை
உன் நினைவுகளை.
இருக்கட்டும் என
பத்திரப்படுத்திவிட்டேன்
என் கவிதைகளில்....
நான் விந்தாகவே வாழ்ந்துவிட்டிருப்பேன்!!
இந்த தலைமுறை-
இதயங்களை கெட்டியாகவே வார்த்துவிட்டது.
வாழ்ந்து பழக நேரமில்லை இவர்களுக்கு!
காலிடறி விழுந்த காரியத்திற்குள்ளும்-எழுந்து அமர்ந்து,
விழுதல் புரிந்து, அங்குலம் அங்குலமாக அளவி ஒய்ந்து,
மேடேறி மேல்வந்து-
ஒரு குடுவையில் வியர்வையையும்,
ஒரு குடுவையில் விளங்கியவையையும்-வழித்தெடுத்து,
காலக்குப்பியில் இட்டு,
திட்டுதிட்டாய் வழ்க்கைவரைய தெரியவில்லை!
புது யுகத்திற்க்கு போகும் அவசரத்தில்
கடந்த காலத்தின் கால்செருப்புகளை தொலைத்தவர்கள்!
தாயின் மரணத்திற்கும் அழதேவையில்லையாம்!
அழுதல் பலவீணமாம்!!
தேவைக்கேற்ப முகமூடிகள் தயரித்துக்கொண்டவர்கள்!
மொட்டுகள் விரியும் வரை பொறுக்கவேண்டாமாம்!
மருந்துகள் கொண்டு
பூவையும் விரைந்து பூப்படையச்செய்தவர்கள்!!
குண்டு தயாரிப்பதை குடிசைதொழிலாக்கியவர்கள்!
மெக்காலேயின் நீட்சியாக
முலை சுருங்கி
புத்தகம் சுமக்க ஏதுவாக
முதுகில் மூட்டையோடு பரிணமித்துவிட்டவர்கள்!
ஒரு இமாலய நம்பிக்கையொடு
புத்தக நடுவில் பத்திரப்படுத்திய மயிலிறகுகள்-
குட்டி போடுவதில்லை இப்பொழுது!
அதற்கும் "அபார்சன்" பழக்கியவர்கள்!
பாட்டி கதை,
நிலா சோறு,
அம்மா மடி,
தொட்டில் தூக்கம்...
அனைத்தையும் துடைத்தெடுத்து
சிலவற்றை பரண்மேலும்,
சிலவற்றை முதியொர் இல்லத்திலும்,
சரிவர அடக்கம் செய்தவர்கள்!
அம்மா
பாலூட்ட,பாசம் காட்ட
கணினி கண்டுபிடித்துவிடுவார்கள்!
மன்னித்துவிடு என்னை..
நான் விந்தாகவே வாழ்ந்துவிட்டிருப்பேன்!!
-----------------------------------------------------------
இது ஒரு மிகச்சிறிய கூட்டத்தை நோக்கி வீசப்பட்ட வரிகள்.
அந்த சிறிய கூட்டத்தில் நீங்களோ நானோ நின்றுகொண்டிருப்போமானால்
இது தடம்பதியாத ஒரு மெல்லிய சவுக்கடி!
இருவருக்கும்.
இதயங்களை கெட்டியாகவே வார்த்துவிட்டது.
வாழ்ந்து பழக நேரமில்லை இவர்களுக்கு!
காலிடறி விழுந்த காரியத்திற்குள்ளும்-எழுந்து அமர்ந்து,
விழுதல் புரிந்து, அங்குலம் அங்குலமாக அளவி ஒய்ந்து,
மேடேறி மேல்வந்து-
ஒரு குடுவையில் வியர்வையையும்,
ஒரு குடுவையில் விளங்கியவையையும்-வழித்தெடுத்து,
காலக்குப்பியில் இட்டு,
திட்டுதிட்டாய் வழ்க்கைவரைய தெரியவில்லை!
புது யுகத்திற்க்கு போகும் அவசரத்தில்
கடந்த காலத்தின் கால்செருப்புகளை தொலைத்தவர்கள்!
தாயின் மரணத்திற்கும் அழதேவையில்லையாம்!
அழுதல் பலவீணமாம்!!
தேவைக்கேற்ப முகமூடிகள் தயரித்துக்கொண்டவர்கள்!
மொட்டுகள் விரியும் வரை பொறுக்கவேண்டாமாம்!
மருந்துகள் கொண்டு
பூவையும் விரைந்து பூப்படையச்செய்தவர்கள்!!
குண்டு தயாரிப்பதை குடிசைதொழிலாக்கியவர்கள்!
மெக்காலேயின் நீட்சியாக
முலை சுருங்கி
புத்தகம் சுமக்க ஏதுவாக
முதுகில் மூட்டையோடு பரிணமித்துவிட்டவர்கள்!
ஒரு இமாலய நம்பிக்கையொடு
புத்தக நடுவில் பத்திரப்படுத்திய மயிலிறகுகள்-
குட்டி போடுவதில்லை இப்பொழுது!
அதற்கும் "அபார்சன்" பழக்கியவர்கள்!
பாட்டி கதை,
நிலா சோறு,
அம்மா மடி,
தொட்டில் தூக்கம்...
அனைத்தையும் துடைத்தெடுத்து
சிலவற்றை பரண்மேலும்,
சிலவற்றை முதியொர் இல்லத்திலும்,
சரிவர அடக்கம் செய்தவர்கள்!
அம்மா
பாலூட்ட,பாசம் காட்ட
கணினி கண்டுபிடித்துவிடுவார்கள்!
மன்னித்துவிடு என்னை..
நான் விந்தாகவே வாழ்ந்துவிட்டிருப்பேன்!!
----------------------------------------
இது ஒரு மிகச்சிறிய கூட்டத்தை நோக்கி வீசப்பட்ட வரிகள்.
அந்த சிறிய கூட்டத்தில் நீங்களோ நானோ நின்றுகொண்டிருப்போமானால்
இது தடம்பதியாத ஒரு மெல்லிய சவுக்கடி!
இருவருக்கும்.
காதலும் சாகும்
நீளஅகல முடிவிலா
நெடிய பள்ளத்தாக்கின்
உயரிய முனை மழுங்கிய பாறையுடன்
பற்றற்று விலகி.,
கீழ்நோக்கிய ஒரு நீண்ட பயணத்தில்
கனத்து லேசாகி..,
லேசாகி பின் கனத்து,..
ஒரு பனிவிரவிய பாறையில் பட்டு
சிதறுண்ட கபாலச் சில்லுகளில் படிந்திட்ட
சதைப்பிசுக்கை கொத்தியபடிக்கு
கத்தும் கழுகின் ஓலத்தில்
சிக்கித் தொலைகிறது என்
மங்கிய முனகலின் ஈரம்!
காதல் வீரியத்தின்
விசைமுறுக்கிய சிறுஅகமுனைதலில்
தொடங்கிய அந்த நீண்ட பயணத்தை.,
கோழை என மொழிபெயர்ப்பின்,
காதலும் சாகும்!
நெடிய பள்ளத்தாக்கின்
உயரிய முனை மழுங்கிய பாறையுடன்
பற்றற்று விலகி.,
கீழ்நோக்கிய ஒரு நீண்ட பயணத்தில்
கனத்து லேசாகி..,
லேசாகி பின் கனத்து,..
ஒரு பனிவிரவிய பாறையில் பட்டு
சிதறுண்ட கபாலச் சில்லுகளில் படிந்திட்ட
சதைப்பிசுக்கை கொத்தியபடிக்கு
கத்தும் கழுகின் ஓலத்தில்
சிக்கித் தொலைகிறது என்
மங்கிய முனகலின் ஈரம்!
காதல் வீரியத்தின்
விசைமுறுக்கிய சிறுஅகமுனைதலில்
தொடங்கிய அந்த நீண்ட பயணத்தை.,
கோழை என மொழிபெயர்ப்பின்,
காதலும் சாகும்!
Friday, August 7, 2009
நிர்வாணத்தின் வேர் தேடி....
தீ உருண்டையாம் பூமியின் அம்மணக்கோலம்
நீராய்,மரம்செடியாய்
மலையாய்,மண்துகளாய்
மெல்ல மூடப்பட்டுக்கொண்டிருந்த சமயம்-
நிர்வாணத்தையே உடுத்திக்கொண்டு
ஈடன் தோட்டத்தில் உலவினான் ஆதாம்!
ஏவாளும் அப்படியே!!
பின்னொரு நாளில்,
சர்ப்பமாம்,சாத்தானாம்,
காதலிக்க கனிகள் தருபவனாம்,
தந்துவிட்டுப்போன ஆப்பிளை கடித்தவுடன்
நிர்வாணத்தின் வாய் மூடப்பட்டுவிட்டது!!
'உடல்' மறைப்பதாய் உயிர்த்த
மரப்பட்டையும்,மான்தோலும்,
தன் பிறவிப்பயன் பின்தள்ளி,
'அங்கம்' மறைக்க ஆயுத்தமானது!!
பல நுற்றாண்டுகள் சாவதானமாய் சுற்றிக்கொண்டிருந்த
உருண்டையின் சிறு உன்னதபுள்ளியில் ஜீவித்த
போதிமரத்தின்கிளையில்-ஒரு சாயுங்காலத்தில்,
சித்தார்த்தன் கிழித்தெரிந்த மேல்சட்டை சிக்கிக்கொண்டு-
நிர்வாணத்தின் நியாயத்தை
வேர்வரை செப்பிக்கொண்டிருந்தது!!
நிர்வாணம் சூன்யம்,
நிர்வாணம் முடிவிலி,
நிர்வாணம் நிஜம்-இருப்பினும்
போதிமரக்கிளையும் சரி...
புத்தனின் நிர்வாணமும் சரி...
சில நுற்றாண்டுகள்கூட நீடித்திருக்கவில்லை!!
இன்னிமிடம் வரை நம்மினம்தவிர எவ்வினமும்
நிர்வாணத்தை அவிழ்த்துவிடவில்லை.
பின் நாகரிகத்தின் முகம்பார்க்க தொடங்கி
முதுகுவரை கண்டுதெளிந்திட்ட நம்மினம்-
நிர்வாணத்தை நான்குசுவற்றிற்குள் நியாயப்படுத்திக்கொண்டது.
ஆடை அவிழ்ப்பது நிர்வாணமாகிவிடா-
ஆடை துறப்பது நிர்வாணம்!!
அவிழ்க்கப்பட்டுப்பட்டு பின் துறப்பதற்கு துணிந்திட்ட
அத்தாசியாம்-அவள் மூளையில்,
நியூரானோடு,நிர்வாணத்தின் வேர்களும் பின்னப்பட்டிருக்கும்!!
அகசுவாதீனம் அற்றுப்போய்-அழுவதையும்,சிரிப்பதையும்
ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தவல்ல அச்சகோதரியாம்,
அவளை அறியாமல் சரிந்துவிழும் மாராப்பில்-
நிர்வாணத்தின் ஒரு சிறுநம்பிக்கை நிமிர்ந்துநிற்கும்!!
எத்தகை வாழ்க்கை வாழ்ந்திட்டோம்??
காதலித்த பொழுதுகளின் புதர்மறைவிலும்-
இரவு நேரக்காட்ச்சியின் இடைவேளையிலும்-
காமத்துப்பால் சொம்பின் பக்கத்தில் ஒரு கிண்ணத்திலும்-
நிர்வாணத்தின் நீளஅகலம் அளக்கிறோம் நாம்!!
ஊதா பூக்களும்,ஆப்பிளும்
நிறைந்த அந்த ஈடன் தோட்டத்தில்,
ஆதாமின் கையிலிருந்த ஆப்பிளின் மிச்சம்தின்று
புறப்பட்ட அந்த நிர்வாணப்பறவை-
அதே புத்தன் பிறந்த ஒரு சாயுங்காலத்தில்,
மின்கம்பியில் அமர்ந்தவண்ணம்'
நம் தலையில் எத்தித்தள்ளும் எச்சத்தில்
நிர்வாணத்தின் விதை நிச்சயம் இருக்கும்!
அதன் வேர் மூளை இறங்கி,மனம் துளைத்து,
வெளியேறி நம் சட்டைகிழிக்கும்போது
நிர்வாணத்தின் வாய் தானாக திறந்துகொள்ளும்!!
Subscribe to:
Posts (Atom)