பரிணாமத்தின் பொத்தான்கள்
அவிழ்ந்த வேகத்தில் -
வால் விழுந்ததுவும்,
கூன் நிமிர்ந்ததுவும்,
மேனி மயிர் உதிர்ந்ததுவும் நினைவிழந்து -
மரமேற்றதின் உச்சியில்,
தன் குறி மறைக்க உந்தியதும் கை எடுக்க.,
விழுந்த குரங்கின் கீழ்புறமிருந்து
சில மனிதனும் , நிறைய காதலும் வடிந்திருக்கும்.!!
ஆதி மனிதனின் முதல் புணர்தலில் ,
வெட்கம் விரிந்த மேனிக்கு கீழிருக்க,
கனத்து வீங்கிய காமத்தின் உரசலில்
வெள்ளையாய் காதல் வெளிபட்டிருக்கும்.!!
கூச்சத்தையும் ,சிணுங்கலையும்
முத்தத்தையும், முனகலையும்
மொழியாக்கிய அவசரத்தில்
காமதிருப்பத்தை காதலிப்பதாய்
கிறுக்கிய சுவடுகள்,
மொஹெஞ்சதாரோ குடுவையிலோ,
ஆப்பிரிக்கா மர பொந்திலோ,
அஜந்தா குகை சுவரிலோ,
பத்திரமாய் இருந்திருக்கும்!!
காலத்தின் அக்குள்களில்
மறைந்த முடியாகிய -அச்சிறு
மொழிவிளக்கம் யாதெனில்...
"யோனி சிவத்தலும் ,
குறி விரைத்தலுமே காதல்!!"
Monday, December 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
kallakkal machi...... mass:-)
ReplyDeletethanks da...
ReplyDelete