Wednesday, November 11, 2009

உபயோகிப்பதில்லை உன் நினைவுகளை.!!

தேநீர் அருந்துகையில்,
இரண்டு பருகைக்கு
இடையில் சிக்கிக்கொள்ளும்
சர்க்கரை நிமிடங்களில்..

மதிய இடைவேளையில்,
உணவு மறுதலித்து,
தட்டில் சுற்றும்
மேல் மின்விசிறியின் பிம்பத்தோடு
சுற்றிய தருணங்களில்..

தூக்கம் தொலைந்து,
கெட்டித்து போயிருக்கும்
பின் இரவுகளில்...

வீங்கி கனத்திருக்கும்
விடிகாலை மௌனங்களில்..

உபயோகிப்பதில்லை
உன் நினைவுகளை.
இருக்கட்டும் என
பத்திரப்படுத்திவிட்டேன்
என் கவிதைகளில்....

No comments:

Post a Comment