நீளஅகல முடிவிலா
நெடிய பள்ளத்தாக்கின்
உயரிய முனை மழுங்கிய பாறையுடன்
பற்றற்று விலகி.,
கீழ்நோக்கிய ஒரு நீண்ட பயணத்தில்
கனத்து லேசாகி..,
லேசாகி பின் கனத்து,..
ஒரு பனிவிரவிய பாறையில் பட்டு
சிதறுண்ட கபாலச் சில்லுகளில் படிந்திட்ட
சதைப்பிசுக்கை கொத்தியபடிக்கு
கத்தும் கழுகின் ஓலத்தில்
சிக்கித் தொலைகிறது என்
மங்கிய முனகலின் ஈரம்!
காதல் வீரியத்தின்
விசைமுறுக்கிய சிறுஅகமுனைதலில்
தொடங்கிய அந்த நீண்ட பயணத்தை.,
கோழை என மொழிபெயர்ப்பின்,
காதலும் சாகும்!
Wednesday, November 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment