Friday, August 7, 2009
நிர்வாணத்தின் வேர் தேடி....
Tuesday, August 4, 2009
நியாபகம் தப்பிய உன்காதலும்,மூர்ச்சையான என்காதலும்....
Monday, August 3, 2009
கனவுகள் புதைக்கப்படுகிறது
பின் மூளையின்
சுருக்கங்களில்...
மேடு பள்ளங்களில்...
அடிவாரத்தில்....
புதைந்தாகிப்போன
உன் நியாபகபடிமங்களை...
மெல்ல பெயர்த்தெடுத்து,
உயிர்பித்து...
கனவாக்கிக்கொள்ள
முயன்ற நிமிடத்தின்
கடைசி நொடியில்...
"சார் பேப்பர்........!!!!!"
ஒரு இயல்பான இரவு.
அன்றும் என்றும்போல் ஒரு இயல்பான இரவு.
மழை பட்டு தெரிக்கும் வெளிமுற்றத்தில்
உன் கொலுசு சத்தம் கேட்டவுடனே
விதி மீறி அலறியடித்துவிட்டது நான் விடிகாலைக்கு வைத்த அலாரம்!!
அலாரத்தை மன்னித்தாகிவிட்டது!!
உன் நெற்றி வழிந்து,மூக்கு நுனியில் முகாமிட்டிருக்கும்
முன்பே விழுந்துவிட்டிருக்கவேண்டிய ஒரு சொட்டு துளி...
புவியீர்ப்பு விசைக்கு முதுகுகாட்டும் தைரியம்!!
மன்னித்தாகிவிட்டது மழைதுளியையும்!!
சட்டென்று கேட்டுவிட்டாய் நீ...
"உன் இதையத்தில் நான் இருக்கிறேனா.... எங்கே காட்டு?"
உண்மை தானோ?
பெண்களின் காதல்கேள்விகள்... மனதில் முளைத்து,
மூளைக்கு முன்னேறும் முயற்சியில் பாதியில் தோற்று,
வெடுக்கென வாய்வழிவெளியேறிய வினாக்கள்தான்!!
விளங்கவில்லை எனக்கு??.
போகட்டும் போ...
இதோ நெஞ்சுகூடு கிழித்து,
கைவிட்டு துலவி தேடி எடுக்கிறேன்..
"அறிவியல் புத்தகங்களில் மட்டுமே கண்டு தெளிந்த.."
அந்த இதயத்தை.... அசட்டு நம்பிக்கைதான்!!
என் கைதட்டிவிட்டு சிரித்தபடியே மழையில் நகர்ந்துபோகிறாய்.
திடுக்கிட்டு எழுந்துபார்க்கிறேன்.
ரத்த சுவடும் இல்லை-உன்
சத்த சுவடும் இல்லை!!
இப்படித்தான்
மழையாகி
ரணமாகி-பின்
வீணாகிபோகிறது...
ஒவ்வொரு இயல்பான இரவும்!!.
வெட்கம் வரைகிறேன்....
சிவப்பு...
உனக்கு பிடிக்குமென வெளிர் மஞ்சள்...
கொஞ்சம் ஊதா....
ஆகிய
வண்ணக்குடுவைகளை
இடக்கையில் ஏந்தியபடிக்கு.....
நெளி கோடுகளாகவும்....
நீள் வட்டங்களாகவும்.....
சிறுவனின்
சிலேட்டுச்சித்திரங்களுக்கு சற்றும்
குறைவில்லா விதத்தில்....
வரைந்துகொண்டிருக்கிறேன்,
உன் உதட்டுச்சுருக்கங்களையும்....
திடுமென வெடித்துவிழும்
வெட்கங்களையும்......
Saturday, August 1, 2009
என் அப்பாவாகிய நீ...
பெரும்பாலான என் கவிதைகள்
இட்டு நிரப்பியபிறகுதான் தலைப்புகள் கண்டெடுக்கப்படும்.
உனக்கான கவிதையில் உன்பெயர்தான் பிள்ளையர் சுழி!!
உன் அடையாளங்களை அதிகம் சுமந்தவர் பட்டியலில்
'உந்தன் கந்தல் அரைக்கை சட்டையின் கடைசி பொத்தானைப்போல்...'
நான் நிச்சயமாய் ஒட்டிக்கொண்டிருப்பேன் அப்பா.....
பொங்கல்,தீபாவளிக்கு புதுச்சட்டை எனக்கு..
அழும்போதெல்லாம் அழகு பொம்மை..
கோடுபோட கற்குமுன்னே ஜியாமெட்ரி பாக்ஸ்!!
பந்து விளையாடி;மிதிவண்டி பழக்கி...
பின் பட்டம் வாங்கவைத்துவிட்டாய் என்னை!!!
அதிகம் படிக்கவில்லையாம் நீ..
முரட்டு சுபாவமாம் உனக்கு-அம்மா சொல்வதுண்டு!!
சிறு வையதில் தந்தை இழந்துவிட்டாயாம்..
குடும்ப சுமை முதுகிலாம்;பாசம் கட்ட நீ பழகவே இல்லையாம்!!
இருப்பின்
உன் துரத்துச்சொந்தமோ,நண்பனோ
நேற்றைய பொழுதில் பழகிட்ட நபரோ.....
எவரிடமாவது,"இவன் என் மகன்...." என்று சொல்லி
கர்வப்பட்டிருப்பாய் அப்பா-அந்த வினாடியை
என் பதினான்ங்கு வையதில் நீ கையில் கட்டிவிட்ட
கருப்பராயன் கோவில் காணிக்கை-அதுவும் தான்.
வீட்டுக்கடன்- இந்த வருடதிற்குள் கட்டியாகிவிடும்.
உனக்கான ஆசை ஒன்றேனும் தெருவி...
நிச்சயமாய் அப்பா..
கடன்காரனாய் காலம்தள்ளுவதில் சத்தியம் எனக்கு உடன்பாடில்லை!!!!!