அன்றும் என்றும்போல் ஒரு இயல்பான இரவு.
மழை பட்டு தெரிக்கும் வெளிமுற்றத்தில்
உன் கொலுசு சத்தம் கேட்டவுடனே
விதி மீறி அலறியடித்துவிட்டது நான் விடிகாலைக்கு வைத்த அலாரம்!!
அலாரத்தை மன்னித்தாகிவிட்டது!!
உன் நெற்றி வழிந்து,மூக்கு நுனியில் முகாமிட்டிருக்கும்
முன்பே விழுந்துவிட்டிருக்கவேண்டிய ஒரு சொட்டு துளி...
புவியீர்ப்பு விசைக்கு முதுகுகாட்டும் தைரியம்!!
மன்னித்தாகிவிட்டது மழைதுளியையும்!!
சட்டென்று கேட்டுவிட்டாய் நீ...
"உன் இதையத்தில் நான் இருக்கிறேனா.... எங்கே காட்டு?"
உண்மை தானோ?
பெண்களின் காதல்கேள்விகள்... மனதில் முளைத்து,
மூளைக்கு முன்னேறும் முயற்சியில் பாதியில் தோற்று,
வெடுக்கென வாய்வழிவெளியேறிய வினாக்கள்தான்!!
விளங்கவில்லை எனக்கு??.
போகட்டும் போ...
இதோ நெஞ்சுகூடு கிழித்து,
கைவிட்டு துலவி தேடி எடுக்கிறேன்..
"அறிவியல் புத்தகங்களில் மட்டுமே கண்டு தெளிந்த.."
அந்த இதயத்தை.... அசட்டு நம்பிக்கைதான்!!
என் கைதட்டிவிட்டு சிரித்தபடியே மழையில் நகர்ந்துபோகிறாய்.
திடுக்கிட்டு எழுந்துபார்க்கிறேன்.
ரத்த சுவடும் இல்லை-உன்
சத்த சுவடும் இல்லை!!
இப்படித்தான்
மழையாகி
ரணமாகி-பின்
வீணாகிபோகிறது...
ஒவ்வொரு இயல்பான இரவும்!!.
No comments:
Post a Comment