பின் மூளையின்
சுருக்கங்களில்...
மேடு பள்ளங்களில்...
அடிவாரத்தில்....
புதைந்தாகிப்போன
உன் நியாபகபடிமங்களை...
மெல்ல பெயர்த்தெடுத்து,
உயிர்பித்து...
கனவாக்கிக்கொள்ள
முயன்ற நிமிடத்தின்
கடைசி நொடியில்...
"சார் பேப்பர்........!!!!!"
நானும் நடக்க தொடங்கிவிட்டேன்....
No comments:
Post a Comment