பெரும்பாலான என் கவிதைகள்
இட்டு நிரப்பியபிறகுதான் தலைப்புகள் கண்டெடுக்கப்படும்.
உனக்கான கவிதையில் உன்பெயர்தான் பிள்ளையர் சுழி!!
உன் அடையாளங்களை அதிகம் சுமந்தவர் பட்டியலில்
'உந்தன் கந்தல் அரைக்கை சட்டையின் கடைசி பொத்தானைப்போல்...'
நான் நிச்சயமாய் ஒட்டிக்கொண்டிருப்பேன் அப்பா.....
பொங்கல்,தீபாவளிக்கு புதுச்சட்டை எனக்கு..
அழும்போதெல்லாம் அழகு பொம்மை..
கோடுபோட கற்குமுன்னே ஜியாமெட்ரி பாக்ஸ்!!
பந்து விளையாடி;மிதிவண்டி பழக்கி...
பின் பட்டம் வாங்கவைத்துவிட்டாய் என்னை!!!
அதிகம் படிக்கவில்லையாம் நீ..
முரட்டு சுபாவமாம் உனக்கு-அம்மா சொல்வதுண்டு!!
சிறு வையதில் தந்தை இழந்துவிட்டாயாம்..
குடும்ப சுமை முதுகிலாம்;பாசம் கட்ட நீ பழகவே இல்லையாம்!!
இருப்பின்
உன் துரத்துச்சொந்தமோ,நண்பனோ
நேற்றைய பொழுதில் பழகிட்ட நபரோ.....
எவரிடமாவது,"இவன் என் மகன்...." என்று சொல்லி
கர்வப்பட்டிருப்பாய் அப்பா-அந்த வினாடியை
என் பதினான்ங்கு வையதில் நீ கையில் கட்டிவிட்ட
கடிகாரத்தின் முட்கள் கடந்துபோயிருந்தால்.....
நான் பாக்கியசாலி!!!
மளிகை பாக்கி-கொடுத்தாயிற்று....
கருப்பராயன் கோவில் காணிக்கை-அதுவும் தான்.
வீட்டுக்கடன்- இந்த வருடதிற்குள் கட்டியாகிவிடும்.
உனக்கான ஆசை ஒன்றேனும் தெருவி...
நிச்சயமாய் அப்பா..
கடன்காரனாய் காலம்தள்ளுவதில் சத்தியம் எனக்கு உடன்பாடில்லை!!!!!
கருப்பராயன் கோவில் காணிக்கை-அதுவும் தான்.
வீட்டுக்கடன்- இந்த வருடதிற்குள் கட்டியாகிவிடும்.
உனக்கான ஆசை ஒன்றேனும் தெருவி...
நிச்சயமாய் அப்பா..
கடன்காரனாய் காலம்தள்ளுவதில் சத்தியம் எனக்கு உடன்பாடில்லை!!!!!
நல்ல கவிதை ... இயல்பாய் ... அழகாய் ...
ReplyDelete